தமிழ்நாடு

சினிமா பாணியில் நடந்த கல்யாணம்.. எதுவும் நடக்காதது போல் வந்து தூங்கிய சிறுமி

தந்தி டிவி

 நீலகிரியில் 14 வயது சிறுமியை 2-வது திருமணம் செய்த இளைஞர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். உதகையை அடுத்த காந்தல் பகுதியை சேர்ந்த 22 வயதான புவனேஸ்வர் என்பவருக்கு திருமணமான நிலையில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் புவனேஸ்வருக்கும் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதாலாக மாறியுள்ளது. இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, அலைப்பாயுதே படத்தில் வருவது போல அவரவர் வீட்டிற்கு சென்று சகஜமாக இருந்துள்ளனர். இதனையடுத்து திருமணம் செய்த போது எடுத்த புகைப்படத்தை, சிறுமி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், புவனேஸ்வர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை