ஆர்ப்பரித்து கொட்டும் அருவி.. குற்றாலத்தில் ஆட்டம் போட்ட டூரிஸ்ட்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழையுடன் இதமான சூழல் நிலவி வருவதால், வார விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து வந்துள்ள மக்கள், மெயின் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.