தமிழ்நாடு

Thiruttani | நின்று கொண்டிருந்த லாரியில் மோதி நசுங்கிய டிப்பர் லாரி-கண்ணிமைக்கும் நொடியில் பயங்கரம்

தந்தி டிவி

திருத்தணி அருகே சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த டிப்பர் லாரியின் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பொன்பாடி சோதனை சாவடி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக கண்டெய்னர் லாரி ஒன்று, நின்று கொண்டு இருந்தது. இந்த நிலையில், அந்த வழியாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அருள் என்பவர் ஆந்திராவில் இருந்து திருத்தணி நோக்கி கிராவல் மண்ணுடன் அசுரவேகத்தில் ஓட்டி வந்த டிப்பர் லாரி, கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், டிப்பர் லாரியின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கிய நிலையில், இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர் உயிருக்குப் போராடினார். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்