தமிழ்நாடு

Chengalpattu |போதையில் தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை -சென்னை அருகே அரங்கேறிய பயங்கரம்

போதையில் தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை -சென்னை அருகே அரங்கேறிய பயங்கரம்

thanthitv

Chengalpattu | போதையில் தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை -சென்னை அருகே அரங்கேறிய பயங்கரம் #chengalpattu #attack #crime #thanthitv செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மதுபோதையில் தாயை வெட்டிய மகனை, தந்தை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம், பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் பிரபாகரன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட‌தோடு, தாயை கத்தியால் வெட்டியுள்ளார்.. இதையடுத்து, மகன் பிரபாகரனுக்கும், தந்தை சேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த தந்தை சேகர், கொக்கு சுடும் நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மகனை சுட்டுள்ளார். இதில், பிரபாகரனின் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் துப்பாக்கி சூட்டினால் காயமடைந்த பிரபாகரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். மகனை துப்பாக்கியால் சுட்ட சேகரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

CUET Exam | தாமதமான `CUET’ தேர்வு.. தொழில்நுட்ப கோளாறால் பரபரப்பு

Electric trains | Time Table | மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. புது அட்டவணை இதோ!

Tasmac Issue | மீண்டும் திறக்கப்பட்ட‌ டாஸ்மாக்.. தி.குன்றத்தில் கிளம்பிய சர்ச்சை

#BREAKING || Alangulam | தமிழகத்தையே உலுக்கிய ஆலங்குளம் சம்பவம்.. ட்ரோன் வைத்து தூக்கிய போலீசார்

TVK | ADMK | தவெக அரசுக்கு ஈபிஎஸ் வைத்த செக்மேட்