தமிழ்நாடு

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றவர்... மூச்சுத் திணறலே உயிரிழப்புக்கு காரணம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்து உள்ளார்.

தந்தி டிவி

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றவர்... மூச்சுத் திணறலே உயிரிழப்புக்கு காரணம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்து உள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த 40 வயதான அந்த நபர் , மே 8 ஆம் தேதி முதல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான தலைவலி, கண்வலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்துள்ளது. உடனே அவரை கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் உயிர் பிரிந்துள்ளது. இதனிடையே, சுவாச சிக்கல் காரணமாகவே அவர் உயிரிழந்து உள்ளதாக அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.

CM Vijay Karnataka | "CM விஜய்யின் கர்நாடக பயணம் எப்போது?" - அமைச்சர் வினோத் சொன்ன தகவல்

BREAKING || "கையில் ஆதாரம் இருக்கு" - 2வது நாளாக செந்தில்பாலாஜியிடம் போலீஸ் விசாரணை

Sivakasi | அதிகாலையில் வெடித்து சிதறிய பட்டாசு குடோன் - 2 பேர் பலி.. சிவகாசியில் அதிர்ச்சி

BREAKING "30ம் தேதிக்குள் கல்லூரியில் சேர உத்தரவு... இல்லை என்றால் ரத்தாகும்"-மாணவர்கள் கவனத்திற்கு

Minister Ramesh | 8 பேர் சஸ்பெண்ட் - அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆக்‌ஷன்