Vada Palani | Chennai | Accident | ஒரு நிமிட அவசரத்தால் பறிபோன உயிர் - லாரி டயரில் சிக்கி பலியான இளைஞர் #chennai #accident #death #thanthitv லாரியை முந்திய போது விபத்து - சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி சென்னை வடபழனி அருகே இரும்பு தகடுகளை ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்ற போது, இளைஞர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சூளைமேடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் 32 வயதான கோபால் (எ) மோகன கிருஷ்ணன். திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், கார் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் கேசவன் உடன் பைக்கில் வடபழனி நோக்கி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் கோபால் உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் கேசவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாரி ஓட்டுனர் சுதாகரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.