சென்னை கிண்டியில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சுண்டல் உணவில் பல்லிகள் இறந்து கிடந்த விவகாரம் தொடர்பாக, பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியில் பங்கேற்றவர்களிடம் என்ன நடந்தது என்பதை கேட்டறிந்தார். இதனிடையே, சுண்டல் மாதிரிகளை எடுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதனை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர். பல்லி விழுந்தது உறுதி செய்யப்பட்டால் கேண்டின் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.