அரசு மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை செய்து சாதனை ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில் 24 வயது கபடி வீரருக்கு நுண்துளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கபடி வீரர் தீபக் குமார், போட்டியின் போது முழங்காலில் காயமடைந்தார். பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, முழங்கால் ஜவ்வு கிழிந்தது கண்டறியப்பட்டதால் மருத்துவர்கள் நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். பொதுவாக பெரிய நகர மருத்துவமனைகளில் நடைபெறும் இந்த சிகிச்சை, பவானி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டதால் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.