தமிழ்நாடு

ஓடும் பேருந்தை வழிமறித்து மாணவனை வெட்டிய மர்ம நபர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பேருந்தை வழிமறித்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கல்லூரி மாணவனை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை ஆண்டிசூரணி விளக்கு பகுதியில், இரு சக்கர வானத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர். கத்திகளுடன் பேருந்தில் ஏறிய அவர்கள் பேருந்தில் பயணித்த பயணிகளை மிரட்டி, சூசையப்பர்பட்டிணத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் சிவக்குமாரை பிடித்து அவரது வலது கையில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த மாணவன் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒடும் பேருந்தை வழிமறித்து மாணவனை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை