தமிழ்நாடு

தனியார் பைக் ஷோ ரூமில் தீ விபத்து... 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை

சங்கரன் கோவிலில், தனியார் பைக் ஷோ ரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயல் எரிந்து சாம்பலாகின.

தந்தி டிவி

சங்கரன் கோவிலில், தனியார் பைக் ஷோ ரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயல் எரிந்து சாம்பலாகின.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள தனியார் பைக் ஷோ ரூமில் அதிகாலை 3 மணி அளவில், மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். மேலும், 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீக்கிரையானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தீயணைப்புதுறை அதிகாரி கவிதா கூறுகையில், இந்த இரு சக்கர வாகன ஷோரூமில் எந்த விதமான பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ