#kovai #snake #thanthitv
கோவை மாவட்டம் சூலூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சாவி போடும் பகுதியில் சிறிய நாகப்பாம்பு பதுங்கியிருந்தது. பைக்கில் சாவி போட முயன்றபோது பாம்பை பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், பாம்பை லாவகமாக பிடித்து பத்திரமாக மீட்டனர்.