சேலத்தில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினர் பயங்கரமாக மோதிக்கொண்ட பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன...
மேட்டுத்தெரு பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிய போது, அவ்வழியாகச் சென்ற ஒரு குடும்பத்தினர் மீது பந்து விழுந்துள்ளது. அதைத் தட்டிக்கேட்ட அக்குடும்பத்தினரை இளைஞர்கள் தாக்க, இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் காயமடைந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், சேலம் டவுன் போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.