தமிழ்நாடு

டி.வி ரிமோட்யைஉடைத்ததால் 7-ம் வகுப்பு மாணவி விபரீத முடிவு - மேட்டூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, டிவி ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அடுத்த நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல் - ரூபிணி தம்பதியருக்கு கவியரசி, பிரபா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கவியரசி, அரசு பெண்கள் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்தார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் சிறுமிகள் இருவரும் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கவியரசி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சகோதரிகளிடையே டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கவியரசி டி.வி ரிமோட்டை உடைத்ததாகவும், பின்னர் பெற்றோருக்கு பயந்து வீட்டின் கதவை தாழிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை