`குடைக்குள்’ இருந்து சீறிய 4 அடி நல்ல பாம்பு.. நல்லா உதறிஎடுங்க மக்களே..பார்த்தாலே உள்ள உதறுது
#umbrella #snake #viralsnakevideo கடலூர் மாவட்டம் கீழ் அழிஞ்சிப்பட்டு பகுதியில் பால் வியாபாரி மோகன் என்பவரது வீட்டின் மாடியில் குடை ஒன்று மாட்டி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில், குடையில் திடீரென அசைவு தெரிந்து உள்ளே பார்த்தபோது பாம்பு இருந்தது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த வன ஆர்வலர் செல்லா குடையை வெளியே எடுத்து தட்டியபோது அதிலிருந்து நான்கு அடி நீளம் உள்ள நல்லபாம்பு சீறிக்கொண்டு வெளியேறியது. அதனைப் பத்திரமாக மீட்ட வன ஆர்வலர் செல்லா வனப்பகுதியில் விடுவித்த நிலையில், பொதுமக்கள் குடைகளைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.