தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வில் 945 பேர் தேர்ச்சி - அமைச்சர் செங்கோட்டையன்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வில் 945 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தந்தி டிவி
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வில் 945 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மயிலாப்பூர் தொகுதி உறுப்பினர் நட்ராஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு வேலைவாய்ப்பில் 4 விழுக்காடு இடங்கள், பார்வையற்றவர்களுக்கான ஒரு விழுக்காடு இடங்களும் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு வருகிறது என்றார். உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு முடிவுக்கு வந்தபிறகு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை