திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 200 டன் கொண்ட 36 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை, வாலாஜாபாத் அடுத்த பழவேரி கிராமத்தில் உள்ள சிலை சிற்பம் செய்யும் இடத்திற்கு சுமார் 80 கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லப்படுகிறது.
கொரக்கோட்டை கிராமத்தில் பெரிய பாறையை குடைந்து இந்த பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை செதுக்கப்பட்ட நிலையில், சிலையை 180 டயர் கொண்ட ராட்சத கார்கோ வாகனம் மூலம் இரண்டு மாவட்டங்கள் வழியாக பத்திரமாக கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக ஆஞ்சநேயர் சிலையை கொண்டு செல்ல பட்டாச்சாரியார்கள் பல்வேறு சிறப்பு பூஜைகளை செய்தனர்.