தமிழ்நாடு

``பல் சிகிச்சையால் 8 பேர் உயிரிழப்பா?’’ - விரைவில் வெளிவரும் ரிப்போர்ட்

தந்தி டிவி

Tirupathur Issue | ``பல் சிகிச்சையால் 8 பேர் உயிரிழப்பா?’’ - விரைவில் வெளிவரும் ரிப்போர்ட்

வாணியம்பாடி பல் மருத்துவமனையில் பழைய கருவிகளை நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி பல் மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியிலுள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த தனியார் கிளினிக்கில் ஆய்வு செய்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி, 2023-ல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்