தமிழ்நாடு

வேலூர் மத்திய சிறையில் இருந்து 8 ஆயுள் கைதிகள் விடுதலை

தந்தி டிவி

வேலூர் மத்திய சிறையில் இருந்து 8 ஆயுள் கைதிகள் விடுதலை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி, வேலூரில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக சிறையில் தண்டனை அனுபவிக்கும் கைதிகள், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் மத்திய சிறையில் இருந்து, இதுவரை 33 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் உள்ளிட்ட மேலும் 8 ஆயுள் தண்டனை கைதிகள், வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் முன்விடுதலைக்கான ஆணை மற்றும் சிறையில் செய்த வேலைக்கான 5 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வேலூர் சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் வழங்கினார். 

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே