தமிழ்நாடு

கரூர் : 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

கரூரில் தனியார் குடோனில் 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் சோதனை சாவடியில் கடந்த 15-ந்தேதி நடந்த வாகன சோதனையின் போது, பெங்களூருவிலிருந்து கரூர் நோக்கி சென்ற ஒரு லாரியில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கரூரில் உள்ள குடோன்களில் போலீசார் சோதனை நடத்தியதில், 5 ஆயிரத்து 565 கிலோ எடையில் 41 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பிடிபட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது 14 ஆயிரத்து 843 கிலோ எடையில், 74 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள குட்கா பிடிபட்டுள்ளதாக கரூர் மாவட்ட போலீஸ் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைதான நிலையில் தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் கொங்குமணியை போலீசார் தேடி வருகின்றனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..