தமிழ்நாடு

போலி கால்சென்டர் நடத்தி நூதன மோசடி - 7 பேரை கைது செய்துள்ளது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் பணத்தை மோசடி செய்த மற்றொரு கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் பணத்தை மோசடி செய்த மற்றொரு கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள பென்ஸ் கிளப்பில் செயல்பட்டு வந்த போலி கால் சென்டர் கண்டுப்பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர் பென்ஸ் சரவணன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வங்கி கடன் வாங்கி தருவதாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை இந்த கும்பல் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி செல்வகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள பென்ஸ் சரவணன், பத்திரிக்கையாளர் என்ற பெயரில் உலா வந்தது தெரியவந்துள்ளது. அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"