தமிழ்நாடு

6 வயது சிறுவனின் சடலம் குவாரியில் இருந்து மீட்பு : அடித்து கொலையா ? - போலீசார் தீவிர விசாரணை

திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 6 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள குவாரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சந்திரதாசன் என்பவரின் 6 வயது மகன் கவுதமை, அனுசன் என்பவர் வெளியில் அழைத்து சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பிய அனுசன், கவுதமை காணவில்லை என சந்திரதாசனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சந்தேகத்தின் பேரில் அனுசன் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது முகாம் அருகில் உள்ள குவாரியில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது . பின்னர் அனுசனை போலீசார் கைது செய்து கவுதம் அடித்து கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தவறி விழுந்து பலியானரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"