தமிழ்நாடு

மீண்டும் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் - கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

கடலூரில் மீண்டும் 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தந்தி டிவி
கடலூரில் மீண்டும் 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூரில் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக டெங்கு பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இந்த நிலையில் இன்று மீண்டும் 6 பேர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேரையும் தனி வார்டில் வைத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் டெங்கு பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு