கோவையில் 75 வயது மாமியாரை, மருமகனே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவுண்டம்பாளையம் அருகே, 75 வயது மூதாட்டியை, மதுபோதையில் இருந்த 51 வயது மருமகன் அறையின் கதவை பூட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இந்நிலையில், மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து மீட்டனர். மேலும், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகனை, அவரது மகன் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.