தமிழ்நாடு

போதை புகையிலை பொருட்கள் விற்பனை, கடை உரிமையாளரை கைது செய்து போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் செந்தில்குமார் என்பவரின் கடையில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த போதை புகையிலை பொருட்கள், அதிகளவிலான பிளாஸ்டிக் பைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் செந்திலை கைது செய்த ஊத்துக்கோட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்