தமிழ்நாடு

உத்திரப்பிரதேசத்தில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தது

உத்திரப் பிரதேச மாநிலம், காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற இடத்தில் கடும் வெயில் காரணமாக உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தன.

தந்தி டிவி
தமிழகத்தில் இருந்து உத்திரப் பிரதேச மாநிலம், காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற இடத்தில் கடும் வெயில் காரணமாக உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தன. காசிக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றவர்களில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா, பாலகிருஷ்ணன், பச்சையப்பா, கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த கலாதேவி, தெய்வாணை ஆகியோர் ரயிலில் மூச்சுச் திணறி உயிரிழந்தனர். அதனையடுத்து 5 பேரின் உடல்களும் கோவைக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பச்சையா, தெய்வாணை ஆகியோர் உடல்கள் ரயில் மூலம் வந்த நிலையில், மீதமுள்ள 3 பேரின் உடல்களும் விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை