GRT Group | ஜிஆர்டி சார்பில் 1000 மாணவர்களுக்கு ரூ.5 கோடி உதவித்தொகை #GRTGroup #students #tiruttani #thanthitv ஜிஆர்டி குழுமம் சார்பில், தமிழகம் முழுவதும் 1000 மாணவர்களுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற, வறுமையில் உள்ள மாணவர்களை தேர்வு செய்து இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது. திருத்தணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜிஆர்டி குழுமத் தலைவர் ஜி.ஆர். ராஜேந்திரன் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.