தமிழ்நாடு

நகை செய்து தருவதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி, 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை

திருச்செங்கோட்டில் நகை செய்து தருவதாகக் கூறி, 5 கோடியே 70 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், 25 லட்சம் மதிப்புள்ள நகையை மோசடி செய்ததாக திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கடை வியாபாரி பாரத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறை, பாலமுருகனை தேடி வந்தநிலையில், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பாலமுருகன் நிற்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற போலீசார், பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தியதில், இதேபோல் 18 கடைகளில் நகை செய்து தருவதாகக் கூறி 5 கோடி 70 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பாலமுருகனின் மைத்துனர் அருண்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்