தமிழ்நாடு

நகை செய்து தருவதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி, 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை

திருச்செங்கோட்டில் நகை செய்து தருவதாகக் கூறி, 5 கோடியே 70 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், 25 லட்சம் மதிப்புள்ள நகையை மோசடி செய்ததாக திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கடை வியாபாரி பாரத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறை, பாலமுருகனை தேடி வந்தநிலையில், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பாலமுருகன் நிற்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற போலீசார், பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தியதில், இதேபோல் 18 கடைகளில் நகை செய்து தருவதாகக் கூறி 5 கோடி 70 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பாலமுருகனின் மைத்துனர் அருண்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி