தமிழ்நாடு

ஹவாலா பணத்தை பதுக்கிய விவகாரம் : 5 போலீசார் நிரந்தர பணி நீக்கம்

ஹவாலா பணத்தை புதரில் மறைத்து வைத்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி, 5 காவலர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தந்தி டிவி

கடந்தாண்டு கடலூர் ஆல்போட்டை சோதனைசாவடியில் வாகன தணிக்கையின் போது, 20 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் மீட்கப்பட்டது. பணத்தின் ஒரு பகுதியை காவலர்கள் 5 பேர் புதரில் மறைத்து வைத்ததாக அதன் உரிமையாளர் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து, 5 பேரை நிரந்தர பணி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 5 காவலர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டது, கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்