தமிழ்நாடு

ஹவாலா பணத்தை பதுக்கிய விவகாரம் : 5 போலீசார் நிரந்தர பணி நீக்கம்

ஹவாலா பணத்தை புதரில் மறைத்து வைத்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி, 5 காவலர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தந்தி டிவி

கடந்தாண்டு கடலூர் ஆல்போட்டை சோதனைசாவடியில் வாகன தணிக்கையின் போது, 20 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் மீட்கப்பட்டது. பணத்தின் ஒரு பகுதியை காவலர்கள் 5 பேர் புதரில் மறைத்து வைத்ததாக அதன் உரிமையாளர் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து, 5 பேரை நிரந்தர பணி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 5 காவலர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டது, கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்