தமிழ்நாடு

ஹவாலா பணத்தை பதுக்கிய விவகாரம் : 5 போலீசார் நிரந்தர பணி நீக்கம்

ஹவாலா பணத்தை புதரில் மறைத்து வைத்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி, 5 காவலர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தந்தி டிவி

கடந்தாண்டு கடலூர் ஆல்போட்டை சோதனைசாவடியில் வாகன தணிக்கையின் போது, 20 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் மீட்கப்பட்டது. பணத்தின் ஒரு பகுதியை காவலர்கள் 5 பேர் புதரில் மறைத்து வைத்ததாக அதன் உரிமையாளர் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து, 5 பேரை நிரந்தர பணி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 5 காவலர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டது, கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?