காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் பொருட்களை உடைத்து தகராறு செய்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சரவணன் என்பவருக்கு சொந்தமான மருந்தகத்தில் இளைஞர்கள் சிலர் குடிபோதையில் போதை மாத்திரை கேட்டு தகராறு செய்துள்ளனர். மருந்து சீட்டு இல்லாமல் மருந்து தர முடியாது என்று உரிமையாளர் சரவணன் கூற, பாறாங்கற்கள், பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடையை அடித்து நொறுக்கினர்.