தமிழ்நாடு

40 ஆடுகளை கடித்த தெருநாய்கள் - 25 ஆடுகள் உயிரிழப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே 40க்கும் மேற்பட்ட ஆடுகளை தெருநாய்கள் கடித்த‌தில், 25 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. தேவிகாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் சுமார் 45க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் இரண்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகளை, நான்கு தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துள்ளன. இதில், 25 ஆடுகள் உயிரிழந்த நிலையில், 15 ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இறந்த ஆடுகளின் மதிப்பு 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்பதால், நிவாரணம் வழங்க வேண்டும் என உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ