தமிழ்நாடு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நடைமுறை என்ன?

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கின் போது சில நடவடிக்கைகளை அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது.

தந்தி டிவி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கின் போது சில நடவடிக்கைகளை அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது.

* பிரீ பெய்ட் ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களை ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் இருந்து அழைத்து வர அனுமதிக்கலாம்.

* வங்கிகள், நிதி நிறுவனங்களின் தலைமையகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்படலாம். 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை குறைந்த ஊழியர்களுடன் வங்கிகள் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை இயங்கலாம்.

* மேலாண்மை மற்றும் கண்காணிப்பு நிலை அலுவலர்களின் போக்குவரத்துக்காக தொழில்துறை மூலம் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

* தொலை தொடர்பு, ஐ.டி. சேவை நிறுவனங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கலாம். அந்த நிறுவனம் தரும் பட்டியலில் உள்ளவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும்.

* எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள், பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அது தொடர்பான பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்