தமிழ்நாடு

மின்னல் தாக்கி விவசாய கூலி தொழிலாளர்கள் 4 பேர் பலி

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் விவசாய பணியில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

இடி தாக்கியதில் கூலித்தொழிலாளி பலி

காஞ்சிபுரம் அருகே மரம் வெட்டிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி இடிதாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. களியனூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கோபி குடும்பத்தோடு மரம் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடி தாக்கி பெண் பலி - இருவர் காயம்

திருவாடானை அருகே வயலில் வேலை செய்த பெண் இடி தாக்கி பலியானார். தேவகோட்டையை அடுத்த தச்சவயலை சேர்ந்தவர் மலர். இவர் திருவாடானையை அடுத்த ஊரணிக்கோட்டை கிராமத்தில் வயலில் கலை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென இடி தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த இரு பெண்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்