தமிழ்நாடு

சென்னை : பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தந்தி டிவி
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் நேற்றிரவு பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் ஓடியுள்ளனர். அவர்களை விரட்டிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்தாண்டு தண்டையார் பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஜீவா என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த லக்‌ஷமன், பிரபாகரன், கோவிந்தராஜ் மற்றும் ராஜ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், ஆயுதங்களையும் பறிமுதல் செய்து தொடர் மேல் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்