தமிழ்நாடு

சென்னை பேருந்தில் கட்டு கட்டாக ரூ.33 லட்சம் பணம்

தந்தி டிவி

ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட ரூ.33.04 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

தஞ்சாவூரில் தனியார் ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட 33 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரத்தநாடு பகுதிக்கு, ஆம்னி பேருந்தில், போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து வந்த ஆம்னி பேருந்தில் பயணித்த சையத் அலாவுதீன், ஜாபர் அலி ஆகியோரை விசாரித்ததில், ஹாவாலா பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. சென்னையில் செல்போன் கடை நடத்தி வரும் இவர்கள், ஒரத்த நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஒப்படைப்பதற்காக கொண்டு சென்ற 33 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்