தமிழ்நாடு

திடீரென தீப்பிடித்த 3 லாரிகள்...4 மணி நேரம் போராட்டம் - நள்ளிரவில் அதிர வைத்த சம்பவம்

தந்தி டிவி

நாமக்கல் அருகே நள்ளிரவில் லாரிகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...முதலைப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் பிரபல தனியார் டயர் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தீபாவளியைக் கொண்டாட ஓட்டுநர்கள் சொந்த ஊருக்கு செல்ல அந்த நிறுவனத்தின் அருகே லாரிகளை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் ஜவுளி துணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரி, ஒரு டேங்கர் லாரி மற்றும் பொருட்கள் ஏதும் இல்லாமல் இருந்த மற்றொரு லாரி என 3 லாரிகள் திடிரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரத்திற்கு போராட்டத்திற்கு பிறகு முழுமையாக தீயை அணைத்தனர்... சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு