தமிழ்நாடு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு - 3 பேர் விடுதலை

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த 3 போ் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

தந்தி டிவி

சொத்து வழக்கில் கடந்த 2000ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் கலவரங்கள் வெடித்தது. அப்போது, தருமபுரியில் சுற்றுலா பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில், 3 கல்லூரி மாணவிகள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அந்த 3 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்