தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் பணியிடை நீக்கம்

மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் ஆவணங்களை எடுப்பதற்காக சென்ற புகாரின் பேரில், கலால் வரித்துறை வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தந்தி டிவி
மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் ஆவணங்களை எடுப்பதற்காக சென்ற புகாரின் பேரில், கலால் வரித்துறை வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் சம்பூர்ணத்துடன் சென்ற அந்தத்துறையின் ஆவணப்பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டல அதிகாரிகளான ராஜ பிரகாஷ், சூரிய பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் நான்கு பேரும் அனுமதி இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குச் சென்றது தொடர்பாக, மதுரை மேற்கு தொகுதி உதவி தேர்தல் அலுவலர் குருசந்திரனிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் நடராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை