தமிழ்நாடு

பால்வாடியில் குக்கர் வெடித்து மூன்று குழந்தைகளுக்கு காயம்

பால்வாடியில் குக்கர் வெடித்து மூன்று குழந்தைகளுக்கு காயம்

தந்தி டிவி

காங்கேயம் அடுத்த ஹாஸ்டல் பகுதியில் 10 க்கு 10 அளவு கொண்ட சிறிய அறையில், அங்கன்வாடி மையம் செயல் பட்டுவருகிறது. இந்த பால்வாடியில் சுமார் 6 வயது வரை 20 குழந்தைகள் தினமும் படிக்க வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள் அன்று காலை, சத்துணவு மையத்தில் குக்கர் மூலம் பருப்பு மற்றும் முட்டை வேக வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குக்கர் வெடித்து சிதறி உள்ளது. இதில் அருகில் இருந்த மூன்று குழந்தைகளுக்கு மட்டும் கை, கால்,கண் என பல்வேறு இடங்களில் வெந்நீர் பட்டு காயம் ஏற்ப்பட்டுள்ளது. காயம் அடைந்த மாணவர்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் ஆகியும் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்க வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்