தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...

ரூ.66.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கம் போல் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மலேசியா மற்றும் சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை, சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்து கொண்ட சென்னையை சேர்ந்த சதாம் உசேன், முஸ்தாக் அலி, திருச்சியை சேர்ந்த அசாருதீன், ஹிக்கமதுல்லா ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்கள் தங்களது செருப்புகள் மற்றும் ஆசனவாயில், பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ 940 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை