தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...

ரூ.66.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கம் போல் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மலேசியா மற்றும் சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை, சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்து கொண்ட சென்னையை சேர்ந்த சதாம் உசேன், முஸ்தாக் அலி, திருச்சியை சேர்ந்த அசாருதீன், ஹிக்கமதுல்லா ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்கள் தங்களது செருப்புகள் மற்றும் ஆசனவாயில், பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ 940 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி