தமிழ்நாடு

ரூ.8 கோடி மதிப்புள்ள 23 கிலோ தங்கம் பறிமுதல்...

மலேசியா, சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ தங்கத்தை பறிமுதல்.

தந்தி டிவி
சர்வதேச நாடுகளில் இருந்து தமிழக விமானநிலையங்களுக்கு தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் மாறுவேடத்தில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வந்த 4 பயணிகளை, சுங்க இலாகா அதிகாரி ஒருவர் எந்தவித சோதனையும் செய்யாமல் வெளியே அனுப்ப முயன்றதை கண்டுபிடித்தனர். உடனே மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த 4 பேரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். பின்னர் அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில், 8 கோடி மதிப்புள்ள 23 கிலோ தங்க கட்டிகள், டிரோன், விலையுயர்ந்த கேமராக்கள் ஆகியவற்றை அவர்கள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் மற்றும் இவர்களுக்கு உதவிய சுங்க இலாகா அதிகாரி என 5 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் சிலரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேடிவருகின்றனர். கடத்தல் கும்பலுக்கு சுங்கா இலாகா அதிகாரியே உதவியாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?