தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார், உயர் கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வனத்துறை செயலாளராக சுப்ரியா சாஹூ, ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அபூர்வா கைத்தறி, காதி மற்றும் ஜவுளித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.