தமிழ்நாடு

ஈரோடு : ஒரே பகுதியில் 2 கிராம மக்கள் போராட்டம் - போலீசார் குவிப்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரே பகுதியில் 2 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரே பகுதியில் 2 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஓட்டப்பாறைக்கு செல்லும் குடிநீர் குழாயில் கடந்த 3 தினங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய மண்ணை தோண்டியபோது, யாரோ சிறிய அளவிலான பைப் பொருத்தி தண்ணீர் செல்லவிடாமல் செய்திருப்பது தெரியவந்த‌து. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டப்பாறை கிராம மக்கள், அருகே உள்ள முகாசிபிடாரியூரை சேர்ந்தவர்கள் மீது குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாகராஜ் என்பவரை ஓட்டப்பாறை கிராம மக்கள் அடித்து விட்டதாக கூறி, முகாசி பிடாரியூர் கிராம மக்கள் அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் குவிக்கப்பட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்