தமிழ்நாடு

மாற்றுத் திறனாளியான 2 மகன்கள்.. ஓலை குடிசையில் பரிதவிக்கும் தாய் - உணவுப் பொருட்கள் வழங்கிய சிற்பக் கலைஞர்

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து மாற்றுத்திறனாளி மகன்களுடன் பரிதவித்த தாய்க்கு, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் உணவுப்பொருட்கள் வழங்கி உதவி செய்துள்ளார்.

தந்தி டிவி

மாற்றுத் திறனாளியான 2 மகன்கள்.. ஓலை குடிசையில் பரிதவிக்கும் தாய் - உணவுப் பொருட்கள் வழங்கிய சிற்பக் கலைஞர்

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து மாற்றுத்திறனாளி மகன்களுடன் பரிதவித்த தாய்க்கு, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் உணவுப்பொருட்கள் வழங்கி உதவி செய்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கருமாரபாக்கத்தில் வசித்து வருபவர் சாந்தி. விவசாய கூலியான இவருக்கு மூளைவளர்ச்சி இல்லாத ஜான்சன், ரூபன் என இரு மகன்கள் உள்ளனர். ஓலை குடிசை வீட்டில் வசித்து வரும் சாந்தி, வறுமையில் வாடி வருவதை அறிந்த மாமல்லபுரம் சிற்பக்கலைஞர் பாலன் அறிவுமணி என்பவர், அரிசி, மளிகை என உணவுப்பொருட்கள் வழங்கி உதவி செய்துள்ளார். இதேபோல, கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஊடல் ஊனமுற்றோர் பலருக்கும் அரிசி, மளிகை உணவுப் பொருட்கள் வழங்கி சிற்பி பாலன் அறிவுமணி உதவி செய்துள்ளதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை