தமிழ்நாடு

தடகளப் பயிற்சியாளர் மீது மேலும் 2 புகார்

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வெளிநாட்டில் உள்ள இரண்டு வீராங்கனைகளை புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வெளிநாட்டில் உள்ள இரண்டு வீராங்கனைகளை புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பயிற்சிக்கு வந்த தடகள வீராங்கனைகளிடம் அத்துமீறியதாக பயிற்சியாளர் நாகராஜன் கடந்த 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது இதுவரை 6 வீராங்கனைகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இதில் 2 வீராங்கனைகள் வெளிநாட்டில் இருந்தபடி நாகராஜன் மீது புகார் அளித்துள்ளனர். நாகராஜன் கைதானதை அறிந்த அவர்கள், தங்களுக்கு அவரால் நேர்ந்த அத்துமீறல்கள் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளனர். நாகராஜனிடம் பயிற்சி பெறும்போது தேசிய மற்றும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தயார்படுத்த வேண்டும் என்றால் தனக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக வீராங்கனைகள் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை