தமிழ்நாடு

செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய தி.மு.க.வினர்...

திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடியில் உள்ள கடையொன்றில் செல்போன் பழுதை சரி செய்ய சென்ற தி.மு.க.வினர் 2 பேர் கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடியில் உள்ள கடையொன்றில் செல்போன் பழுதை சரி செய்ய சென்ற தி.மு.க.வினர் 2 பேர், கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தாக்குதலில் படுகாயம் அடைந்த செல்போன் கடையின் உரிமையாளர் மணிவண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில், தி.மு.க.இளைஞர் அணி அமைப்பாளர் ரகுபதி மாசிலாமணி மற்றும் கணேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். செல்போனை பழுது நீக்கி தர முடியாது என மணிவண்ணன் கூறியதால் ஆத்திரமடைந்த 2 பேரும் அவரையும், கடை ஊழியர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ