தமிழ்நாடு

செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய தி.மு.க.வினர்...

திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடியில் உள்ள கடையொன்றில் செல்போன் பழுதை சரி செய்ய சென்ற தி.மு.க.வினர் 2 பேர் கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடியில் உள்ள கடையொன்றில் செல்போன் பழுதை சரி செய்ய சென்ற தி.மு.க.வினர் 2 பேர், கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தாக்குதலில் படுகாயம் அடைந்த செல்போன் கடையின் உரிமையாளர் மணிவண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில், தி.மு.க.இளைஞர் அணி அமைப்பாளர் ரகுபதி மாசிலாமணி மற்றும் கணேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். செல்போனை பழுது நீக்கி தர முடியாது என மணிவண்ணன் கூறியதால் ஆத்திரமடைந்த 2 பேரும் அவரையும், கடை ஊழியர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்