தமிழ்நாடு

Girl | வீட்டின் கேட்டில் ஏறி விளையாடிய 2 சிறுமிகள் கொடூரமாக பலி - தலையில் அடித்து கதறும் பெற்றோர்கள்

தந்தி டிவி

சிவகாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் ஏறி 2 சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த சுவர் கேட்டுடன் இடிந்து விழுந்துள்ளது.

இதில் இடிபாடுகளில் சிக்கி, ராஜாமணியின் 9 வயது மகள் கமலிகா மற்றும் அவரது உறவினர் மகள் ரிஷிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீட்டின் சுவர் கட்டப்பட்டு 4 ஆண்டுகளே ஆன நிலையில், அந்த சுவர் இடிந்து 2 சிறுமிகளை பலிகொண்டுள்ளது.

வீட்டின் சுவர் இடிந்து 2 சிறுமிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்