தமிழ்நாடு

வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் : பொறியியல் பட்டதாரிகள் 2 பேர் கைது

நிலத்தகராறு குறித்து, விசாரிக்க வந்த வருவாய் ஆய்வாளரை தாக்கிய பொறியியல் பட்டதாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
நிலத்தகராறு குறித்து, விசாரிக்க வந்த வருவாய் ஆய்வாளரை தாக்கிய பொறியியல் பட்டதாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சேலம், சங்ககிரி வட்டம் காவேரிப்பட்டி அருகே அண்ணாமலை என்பவருக்கும், மாரியம்மன் கோவில் நிர்வாகிகளுக்கும், நிலப்பிரச்சனை எழுந்தது. அப்போது, ஆய்வு செய்ய வந்த வருவாய் ஆய்வாளரை, அண்ணாமலையின் இளைய மகன் பூபதி செல்போனில் வீடியோ எடுத்தார். அவரது செல்போனை, வருவாய் ஆய்வாளர் பறிக்க முற்பட்ட போது பூபதி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தேவூர் போலீசார், பூபதி மற்றும் அவரது உறவினர் சதிஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ