தமிழ்நாடு

வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் : பொறியியல் பட்டதாரிகள் 2 பேர் கைது

நிலத்தகராறு குறித்து, விசாரிக்க வந்த வருவாய் ஆய்வாளரை தாக்கிய பொறியியல் பட்டதாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
நிலத்தகராறு குறித்து, விசாரிக்க வந்த வருவாய் ஆய்வாளரை தாக்கிய பொறியியல் பட்டதாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சேலம், சங்ககிரி வட்டம் காவேரிப்பட்டி அருகே அண்ணாமலை என்பவருக்கும், மாரியம்மன் கோவில் நிர்வாகிகளுக்கும், நிலப்பிரச்சனை எழுந்தது. அப்போது, ஆய்வு செய்ய வந்த வருவாய் ஆய்வாளரை, அண்ணாமலையின் இளைய மகன் பூபதி செல்போனில் வீடியோ எடுத்தார். அவரது செல்போனை, வருவாய் ஆய்வாளர் பறிக்க முற்பட்ட போது பூபதி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தேவூர் போலீசார், பூபதி மற்றும் அவரது உறவினர் சதிஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?