தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக மோசடி : இருவர் கைது...

மதுரையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

மதுரையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா என்ற மாற்றுத்திறனாளியிடம் புதூரைச் சேர்ந்த நடராஜன், முத்துசாமி ஆகிய இருவரும் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதற்காக நான்கு லட்சம் ரூபாய் பெற்ற அவர்கள் வேலை வாங்கித் தராமல் பலமாதமாக ஏமாற்றி உள்ளனர். பிரேமா அளித்த புகாரை தொடர்ந்து இருவரையும் புதூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக 25 லட்சம் ரூபாய் பெற்ற கன்னியாகுமரியை சேர்ந்த

பாலமுருகன், சிவராமகிருஷ்ணன், மாணிக்கவாசகம் ஆகிய 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு