தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக மோசடி : இருவர் கைது...

மதுரையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

மதுரையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா என்ற மாற்றுத்திறனாளியிடம் புதூரைச் சேர்ந்த நடராஜன், முத்துசாமி ஆகிய இருவரும் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதற்காக நான்கு லட்சம் ரூபாய் பெற்ற அவர்கள் வேலை வாங்கித் தராமல் பலமாதமாக ஏமாற்றி உள்ளனர். பிரேமா அளித்த புகாரை தொடர்ந்து இருவரையும் புதூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக 25 லட்சம் ரூபாய் பெற்ற கன்னியாகுமரியை சேர்ந்த

பாலமுருகன், சிவராமகிருஷ்ணன், மாணிக்கவாசகம் ஆகிய 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ