தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக மோசடி : இருவர் கைது...

மதுரையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

மதுரையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா என்ற மாற்றுத்திறனாளியிடம் புதூரைச் சேர்ந்த நடராஜன், முத்துசாமி ஆகிய இருவரும் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதற்காக நான்கு லட்சம் ரூபாய் பெற்ற அவர்கள் வேலை வாங்கித் தராமல் பலமாதமாக ஏமாற்றி உள்ளனர். பிரேமா அளித்த புகாரை தொடர்ந்து இருவரையும் புதூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக 25 லட்சம் ரூபாய் பெற்ற கன்னியாகுமரியை சேர்ந்த

பாலமுருகன், சிவராமகிருஷ்ணன், மாணிக்கவாசகம் ஆகிய 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்