தமிழ்நாடு

நடிகை ஜெயபாரதி வீட்டில் நகைகள் திருட்டு - காவலாளி, தனியார் கார் ஓட்டுநர் கைது

நடிகை ஜெயபாரதி வீட்டில் 31 சவரன் நகைகளை திருடியதாக காவலாளி மற்றும் தனியார் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் தெருவில் குடியிருப்பவர் நடிகை ஜெயபாரதி. இவர் முத்து, மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரது வீட்டில் காவலாளியாக உள்ள நேபாளத்தைச் சேர்ந்த ஹர்க்பகதூரும், தனியார் கார் ஓட்டுனர் இப்ராகிமும் இணைந்து சிறுக சிறுக நகைகளை திருடி விற்று வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயபாரதி அளித்த புகாரை தொடர்ந்து இருவரையும் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அடகு கடையில் விற்கப்பட்ட 31 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்