தமிழ்நாடு

ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் காரில் கடத்தல் - இருவர் கைது

தங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியதால் கார்த்திகேயனை கடத்தியதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

தந்தி டிவி

சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மீஞ்சூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பத்து பேரிடம் ஒன்றரை கோடி ரூபாய் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி அன்று காரில் சென்ற கார்த்திகேயன் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது சகோதரி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ராமநாதபுரத்தை சேர்ந்த கோடி , கண்ணன் ஆகியோரை இருவரை கைது செய்தனர். கார்த்திகையனை 3 நாட்கள் கழித்து இறக்கி விட வந்த போது இருவரும் கைது செயப்பட்டனர். தங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியதால் கார்த்திகேயனை கடத்தியதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்